Showing posts with label Pattivaithiyam. Show all posts
Showing posts with label Pattivaithiyam. Show all posts

Friday, January 26, 2018

பாட்டி வைத்தியம் பலன் தரும் | TAMIL PATTIVAITHIYAM

பாட்டி வைத்தியம் பலன் தரும் | TAMIL PATTIVAITHIYAM


சின்ன உடல்நலக் குறைவு என்றால் கூட மருத்துவரை நாடி ஓடும் காலம் இது. ஆனால் அந்தக் காலத்தில், வீட்டில் பாட்டி செய்யும் வைத்தியமே பல உடல்நலக் குறைவுகளைக் குணப்படுத்திவிடும். பாட்டி வைத்தியத்துக்கு எப்போதுமே மகத்துவம் உண்டு. அந்தவகையில், தலைவலியைப் போக்க உதவும் பாட்டி வைத்திய முறைகளைத் தெரிந்துகொள்வோம்…

1. எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்றாக அரைத்து, தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3. முட்டைக்கோஸ் இலைகளை நன்றாக நசுக்கி, ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையில் ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்ட வேண்டும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும், கால்களையும் சுடுநீரில் விடவும். இந்த முறை, ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.


5. அரைத் தேக்கரண்டி கடுகுப் பொடியை, மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்தக் கரைசலை மூக்கில் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

6. பத்து அல்லது பதினைந்து பாதாம்பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.

7. 200 மி.லி. பசலைக் கீரைச் சாறு- 300 மி.லி. கேரட் சாறு அல்லது 100 மி.லி. பீட்ரூட் சாறு- 100 மி.லி. வெள்ளரிச் சாறு இந்த இரண்டு கலவைகளில் ஒன்றைத் தினமும் பருகி வந்தால் ஒற்றைத் தலைவலி அண்டாது.

8. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்) மட்டும் பருகலாம். நீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

9. தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் தலையில் ஒத்தடம் தரலாம்.

10. முழுக் கோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

Thursday, January 25, 2018

பாட்டி வைத்தியம் பெண்கள் | remedies women

பாட்டி வைத்தியம் பெண்கள் | remedies women



அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும்.

* கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

* ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

* ஆற்றுத்தும்பட்டியை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுமோரி மெழுகை கடைகளில் வாங்கி பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும்.

* பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

* கரிசலாங்கண்ணி கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரைசாறு 30 மில்லி எடுத்து



இரண்டையும் ஒன்றாக கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும்.
கருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம் | PREGNANT LADY MARUTHUVA KURIPPUGAL IN TAMIL

கருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம் | PREGNANT LADY MARUTHUVA KURIPPUGAL IN TAMIL


மாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம்.

• கருப்பை கோளாறுகளை தவிர்க்க வாழைப்பூ சாறு, பொரியல் வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• வெள்ளைப்படுதலை தடுக்க முருங்கைக் கீரை, தயிர் சேர்க்கவும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.

• முருங்கைக் கீரை சூப், முடக்கத்தான் கீரை சூப், மணத்தக்காளிக் கீரை சூப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

• கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த பொடி வகை அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருப்பை தொந்தரவால் உண்டாகும் முழங்கால் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை தடுக்கலாம்.

• ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

• ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.
கழுத்து வலி தீர பாட்டி வைத்தியம் | Neck Pain Therapy Remedies

கழுத்து வலி தீர பாட்டி வைத்தியம் | Neck Pain Therapy Remedies



மனிதனை அவதிப்படுத்தும் வலிகள் அனேகம். அதிலும் கழுத்து வலி ஏற்படுத்தும் வேதனை அதை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். இன்று இளைஞர்களும் கூட கழுத்து வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கழுத்து வலி தீர பாரம்பரிய மருத்துவத்தில் சில வழிகள் உள்ளன.

அதில் ஒன்று தலையாணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கழுத்து வலி வந்தால் முதலில் தலையணை வைத்து தூங்குவதை நிறுத்துங்கள் சமதளமான தரையில் பாய் விரித்து தூங்குங்கள் என்கிறார்கள்.

அடுத்து நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள். ஒருநாள் நொச்சி இலை குளியல் என்றால், மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வைத்து குளியுங்கள்.

அடுத்தநாள் வாதமடக்கி(வாத நாராயணன்) இலையை கொதிக்க வைத்து உடம்புக்கு ஊற்றுங்கள் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றார்கள். காலை சிற்றுண்டிக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவில் கலந்து சாப்பிடலாம்.

மதிய உணவுக்கு மிளகு ரசம் அல்லது கண்டதிப்பிலி ரசம் வைத்து சாப்பிடலாம். முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைத்தால் இஞ்சி பூண்டு காராமாக சேர்த்து சாப்பிடலாம்.

இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் ஓடிவிடும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி பாருங்கள்.
பெண்களுக்கான எளிய பாட்டி வைத்தியம் | EASY TIPS PATTIVAITHIYAM

பெண்களுக்கான எளிய பாட்டி வைத்தியம் | EASY TIPS PATTIVAITHIYAM



வெள்ளைக் குண்டுமணி வேர், வெள்ளைச் சாரணை வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைப்பூண்டு, திப்பிலி, மிளகு ஆகிய ஒவ்வொன்றிலும் கால் ரூபாய் எடையளவு எடுத்து துளசி சாற்றில் அரைத்து தண்ணீரில் கலக்கி, மாதவிலக்கு ஏற்பட்ட மூன்றாம் நாள் சாப்பிட கொடுத்து வந்தால் கருப்பையிலுள்ள பூச்சிகள் குறையும்.

• தும்பை இலையை எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும். அதை எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து தொடர்ந்து ஏழு நாட்கள் காலையில் சாப்பிட கொடுத்து வந்தால் பெரும்பாடு குறையும்.

• ஆல மரத்தின் பட்டைகளை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து 1 ஸ்பூன் அளவு பாலில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் கருப்பை கோளாறு குறையும்.

• மலைவேம்பு இலை 200 கிராம், பூ, பட்டை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி, நான்கில் ஒரு பங்காக வற்றும் போது இறக்கி வடிகட்டி இரண்டு வேளை வீதம் சாப்பிட வேண்டும். மாத விலக்கு ஏற்படும் நாட்கள் நீங்கலாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பையிலுள்ள புழுக்கள் குறைந்து குழந்தைபேறு உண்டாகும்.

• 1 கட்டு அளவு மணத்தக்காளி இலைகளை எடுத்து அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு பல், சிறிதளவு சீரகம் சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து கொதித்ததும் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கலந்து மீண்டும் கொதிக்க வைத்து சூப் போல செய்து அடிக்கடி குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.